ஐங்கரன்-ஐரோப்பா Written by  Apr 11, 2020 - 10644 Views

ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம் Featured

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.
அதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.

இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதே நேரம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

இதே நேரம் தற்போது 1,710,324 அளவில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டோர் தொகை 20 இலட்சமாக இருக்கும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன‌
Tagged under
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…