Super User Written by  Feb 27, 2017 - 16920 Views

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் உரை­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது.

எதிர்­வரும் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி ­வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து ஆரா­யப்­ப­ட­வு­டள்­ளது.

அத்­துடன் இலங்கை தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் இலங்கை தொடர்­பான பிரே­ரணை ஒன்றும் பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள முத­லா­வது அமர்வில் ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மேலும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எதிர்­வரும் 28 ஆம் திகதி ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இம்­முறை கூட்டத் தொடர் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமை­ய­வுள்­ளது. விசே­ட­மாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான ஜெனிவா பிரே­ர­ணையை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்­து­மூல அறிக்­கையை எதிர்­வரும் 22 ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தொடர்­பாக உரை­யாற்­ற­வுள்­ளனர்.

எதிர்­வரும் இரண்டாம் திக­தியும் 15 ஆம் திக­தியும் ஐ.நா. விசேட நிபு­ணர்­களின் இலங்கை தொடர்­பான அறிக்­கைகள் குறித்த விவா­தமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்த விவா­தங்­களும் நடை­பெ­ற­வுள்­ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

சிறு­பான்மை மக்­களின் விட­யங்­களை ஆராயும் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் இலங்கை தொடர்­பான அறிக்கை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போது தனது இலங்கை தொடர்­பான அறிக்­கையின் சுருக்­கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேர­வையில் முன்­மொ­ழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்கும்.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்கை தொடர்­பான விவாதம் எதிர்­வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த விவா­தத்­திலும் இலங்கை தொடர்­பாக சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்­வைத்த அறிக்­கையின் பரிந்­து­ரை­களை மேற்­கோள்­காட்டி உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ளன.

இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட உயர் மட்ட அதி­கா­ரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­கப்­டு­கி­றது. ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை அலு­வ­ல­கத்தின் பிர­தி­நி­தி­களும் இலங்கை தூதுக்­கு­ழு­வுடன் இணைந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இம்­முறை இலங்­கையின் சார்பில் முன்­னேற்­றங்­களை வெ ளிப்­ப­டுத்த 18 மாத கால அக­வாசம் கோரப்­ப­ட­வுள்­ளது. அதா­வது பேர­வையில் நாளை உரை­யாற்­ற­வுள்ள அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் மற்றும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்­துதல் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­துதல் உள்­ளிட்­டவை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார்.

அத்­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் அவ­காசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்­கள சம­ர­வீர கோரிக்கை விடுக்­க­வுள்ளார்.

இதே­வேளை 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் வகை­யி­லான பிரே­ரணை ஒன்று பிரிட்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளினால் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதா­வது இலங்­கைக்கு நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க மேலும் கால அவ­கா­சத்தை வழங்கும் நோக்­கி­லேயே இவ்­வாறு பிரே­ர­ணை­யொன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த பிரே­ரணை குறித்த வாக்­கெ­டுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடை­பெறும். இலங்கை அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கினால் ஒரு­வேளை வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடை­பெற்­றதைப் போன்று ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

மேலும் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்­பான அறிக்­கை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூ­ற­லையும் முன்­னெ­டுக்க இலங்­கைக்கு கால அவ­கா­சத்­தையும் பிரே­ரிப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனை அடி­யொட்­டி­ய­தா­கவே பிரிட்டன் கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ரணை அமையும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. "

பல்­வேறு நாடுகள் பங்­கேற்பு

கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்­லாந்து, கனடா, பெல்­ஜியம் உள்­ளிட்ட நாடு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விக­வாரம் தொடர்­பிலும் பிரஸ்­தா­பிப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

டென்­மார்க்கின் வெளி­வி­வ­கார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்­லாந்தின் வெளி­வி­வ­கார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கன­டாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் கிரிஸ்­டியா பீரிலன், பிரான்ஸின் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்­டனின் உள்­ளிட்­டோரும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

சுவீ­டனின் வெளி­வி­வ­கார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொது­ந­ல­வாய அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகியோரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை இந்த அமைப்புக்கள் முன்வைக்கும் என கூறப்படுகின்றது. எனினும் அரசாங்கம் கால அவகாசத்தையே கோரும் என கூறப்படுகின்றது.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…