Super User Written by  Jun 06, 2017 - 6764 Views

டொனால்ட் ட்ரம்ப், கானுடன் மீண்டும் வம்பு

லண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார்.

லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.

ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.
இந்த சோக நிகழ்வுக்கு பின்னர், "இன்றும், இன்னும் சில நாட்களும் அதிக போலீஸார் காவல் பணிபுரிவதை லண்டன் மக்கள் காணலாம். அதைக் கண்டு பீதி அடைய வேண்டாம்" என்று சாதிக் கான் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்திருப்பதற்கு சாதிக் கானை விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின்னணியை எழுத தவறி, "குறைந்தது 7 பேர் பலி. 48 பேர் காயம். லண்டன் மேயர் பீதியடைய வேண்டாம்! என்கிறார்" என டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
மேயர் மீதான டிரம்பின் இந்த தாக்குதலுக்கு பதிலளித்துள்ள அவருடைய செய்தி தொடர்பாளர், "தவறான டிவிட்டர் தகவலுக்கு பதில் அளிப்பதைவிட முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் சாதிக் கானுக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…