Super User Written by  Nov 15, 2016 - 7318 Views

கனவை சாட்சியாக வைத்து 28 ஆண்டுகள் தண்டனையா?

சட்டம் பல குற்றமற்றவர்களை தண்டித்தாலும் ஒரு குற்றவாளியும் தப்பிக்க கூடாது என்பதில் கவனமாக உள்ளது, ஆனால் அமெரிக்க நீதிபதிகள் குற்றவாளியையும் தப்பிக்கவிட்டு குற்றம் செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஒரு சிலவ ஆண்டுகள் அல்ல 28 ஆண்டுகள் குற்றம் செய்யாது சிறையில் இருந்துள்ளார்.

அதுவும் எப்படி நீதிபதிகள் குறித்த நபர் குற்றம் செய்துள்ளார் என கண்டு பிடித்தமை வேடிக்கையானது.

தன்னை பாலியல் வல்லுறவு செய்த நபரை தனது கனவில் அடையாளம் கண்டதாக ஒரு பெண் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நபருக்கு 28 ஆண்டுகள் நீதிபதிகள் தண்டனை கொடுத்துள்ளனர். தற்போது கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல்எ னப்படும் அந்த நபரை அமெரிக்காவின் கொலராடோ மாநில ஜுரிகள் விடுதலை செய்துள்ளனர்.

தான் தவறாக அடையாளம் காணப்பட்டதாக கிளாரென்ஸ் மோசஸ்-இ.எல் என்றழைக்கப்படும் இந்நபர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
தான் தவறு செய்யவில்லை என்று மோசஸ் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், மற்றொரு கைதி எழுதிய கடிதத்தில் அப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தது தானே என்று தெரிவித்துள்ளார்.

கிளாரென்ஸ் மீது வழங்கப்பட்ட தண்டனையை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்து அவரை விடுதலை செய்தாலும், பொது மக்களின் கண்டனங்களையம் மீறி டென்வர் மாவட்ட வழக்கறிஞர் மீண்டும்
இந்த வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளார்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…