Super User Written by  Nov 06, 2016 - 16707 Views

டொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு

அமெரிக்க அதிபர் தேர்வுக்கான வேட்பளாரான டொனால்ட் ட்ரும்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது

கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப்.

தேர்தல் பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.

போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை.
முன்னதாக ஹிலரி மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே அமெரிக்க தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய ஊசலாடும் மாநிலங்கள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஃப்ளோரிடாவில் பேரணி நடத்தினர்.
ஃப்ளோரிடா மற்றும் நெவாடாவில் முன்னதாக நடக்கும் வாக்குப்பதிவில், பெரும் எண்ணிக்கையில் ஹிஸ்பானிய மக்கள் வாக்களிப்பது, ஹிலரிக்கு சாதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குடியரசுக் கட்சியினர் கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிப்பெற இயலாத மாநிலமான மற்றும் ஜனநாயகக் கட்சியின் வலுவான மின்னெசோட்டாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…