Super User

Super User

யாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்

ஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.

அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை தாக்குதல்

வடக்கில் பூரண கதவடைப்பு இடம்பெற்றபோதும் சிங்கள அரச சார்பற்ற, கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது இந்தநிலையில் குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது

இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.

இதனையடுத்து பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டு ள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்ப ட்டது.

இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனையடுத்து படையினரும் மக்கள் மீது தடியடிப்பிரயோகம் நடத்தியதுடன், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கொண்டு தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் டிப்போ சந்திக்கும் இடையேயான பகுதி யுத்தகளமாக காட்சி அளிக்கிறது.

இதேவேளை வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மோசடி! அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு

மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து தரப்பும் ஆதரவு

பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து வடக்கு முழுவதும் இன்று கதவடைப்பு இடம்பெறுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தென் தமிழீழத்திலும் ஆர்ப்பாட்டம்

வடக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்ட பேரணியினைத் தொடர்ந்து கிழக்கிலும் இன்று மாணவர்களால் ஆர்ப்பாட்டம் இடம் பெறுகின்றது. கல்லடி விபுலானந்தர் அழகியல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக் கொண்டு வருகின்றார்.

நாம் அரசாங்கம் அமைப்பது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்காகும். மாறாக, பழிவாங்குவதற்கு அல்ல எனவும் அவர் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.

தாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் FCID எனும் அமைப்பு செயற்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்

கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை வரவில்லை

சிங்கள காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான .பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தஒ போராட்டத்திற்கு காவல்துறையினர் கடமைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு

பிரதேசத்தில் கடமையில் இருந்த இரண்டு காவல்துறையினர் மீது இன்று (23/10/2016) பிற்பகலில் நடந்த வாள் வெட்டு தாக்குதலில், அவர்கள் காயமடைந்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் காவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

வாள்வெட்டு நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு பெருமளவில் அதிரடி காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

பெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடி காவல்துறையினர்
இந்தச் சம்பவம் யாழ் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் யாழ் மாவட்டத்தில் அதகரித்திருப்பதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் இறக்கப்பட்டிருந்த விசேட காவல்துறை அணியொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப்பகுதியில், வியாழக்கிழமை இரவு கடமையில் இருந்தபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து யாழ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்த சூழலிலேயே இந்த வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குளப்பிட்டிச் சந்தி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவராகிய பவுண்ராஜ் எனப்படும் விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவன் சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவனாகிய நடராஜா கஜனின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றுள்ளது. பெருந்திரளான மக்கள் இந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி கிளாலி பகுதி குண்டு வெடிப்பில் ஒருவர் மரணம்
இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் கிளாலி என்ற இடத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் சென்றபோது, குண்டொன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பளை ஆர்த்திநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கறுப்பையா ராஜா என்பவர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது

மட்டக்களைப்பில் பல்வேறு இடங்களில் விபச்சாரவிடுதிகள் இயங்குகின்றன, இவை சிகை அலங்காரன், முக அலங்காரம் என்று பல்வேறு பெயர்களில் இயங்குகின்றன. இந்த விபச்சார நிலையங்களில் பள்ளி மாணவிகளும் ஈடுபடுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக காவல்துறையினர் தேடுதல்களை நடத்துவந்துள்ளனர்.இன்று காவல்துறையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் சிவகீதா கைது செய்யப்பட்டுள்ளார்.


பிள்ளையான் முதலைமைச்சராக இருந்த காலகட்டத்தில் மட்டக்களைப்பில் மேயராக இருந்தவர் சிவகீதா
இவருடன் இவரது கணவர் உட்பட ஏழு பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

மாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு நாளை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

உயிரிழந்த சுலக்சன் சகோதரர் மரணமானது பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது

உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.இவ்வாறு உத்தர வினை மீறிச் சென்ற அனைவரையும் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்ல முடியுமா?

திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது, அதனால் பொலிஸாரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழந்ததனை இந்த அனைத்து தரப்பினரும் அறிந்திருந்தார்கள்.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இவ்வாறு மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிக்கின்றனர், இது ஓர் சாதாரண விடயம் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்,

எனினும், இந்தக் கூற்றினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.இது ஓர் சாதாரண நிலைமையல்ல இது ஓர் அசாதாரண நிலைமை யாகும்.

வடக்கில் இடம்பெற்ற காரணத்தினால் நாம் இந்த சம்பவத்தை கைவிட்டு விடப் போவதில்லை.

மாணவர் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாடு முழுவதிலும் உள்ள பலக்கலைக்கழகங்களில் நாளை போராட்டம் நடத்தப்படும் என லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…