Super User

Super User

யாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம்

வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் வாள்களுடன் கைதானவர்களுக்கு பிணை வழங்க முடியாது என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்ற ச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இன்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது,

செந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெ ட்டுச் சம்பவங்கள் குறைவடைந்து வீதி அடாவடித்தனங்கள் குறைந்திருந்தன.

இப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலை தூக்கியிருக்கின்றன. இந்த நிலை யில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், இங்கு அமைதி நிலைமை பாதிக்கப்படும்.

இந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கை களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணை களுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவர்களுக்கு பிணை வழங்க முடியாது.

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.

எங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் பரிந்துரைக்கின்றது.

இந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச் செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.

ஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார்.

இவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில் சிரமத்தின் மத்தியிலேயே, சாத்தியமானது.

இவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்றது.

குடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில் பிணை வழங்கப்பட மாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

இந்த வழக்கில் அரச சட்டத்தரணி நாகரட்னம் நிசாந்தன் அரச தரப்பில் முன்னிலையாகி இரு ந்தார்.எதிர் தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது

நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.

எமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.

எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

குறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.

போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.

இதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.

படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.

எனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

அரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை

தமிழர் பிரச்சினையை இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றவே கயில் எடுத்தனரே தவிர தீர்வொன்றைப் பெறுவதற்காக பயன்படுத்தவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த தலைவர்கள் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை வழங்காததினால் தான் 30 வருடகால யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி – விகாரமஹாதேவி கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று அந்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இனங்களுக்கு இடையே சுதந்திரமான வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்கும் எனவும் கூறினார்.

“நம்மில் தவறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை சரிசெய்து முன்நோக்கப் பயணிப்பதற்கான தருணம் வந்து ள்ளது. இனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை சரிவர முகாமைசெய்யாமையே நாங்கள் இழைத்த பெருந்தவறாகும். மலே சியாவில் அந்நாட்டுப் பிரஜைகள் 49 வீதமானவர்களே உள்ளனர். 51 வீதமானவர்கள் சீன நாட்டவர்கள். ஆனாலும் அந்த நாட்டில் பாரியதொரு சிவில் யுத்தம் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டு, அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக்கொடுக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பொன்றும் உருவாக்க ப்பட்டது.

சிங்கப்பூரும் அப்படித்தான். சுதந்திரம் கிடைத்து ஓரிரு வருடங்கள் கழிந்தபோது இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டது.துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அது தீர்க்கப்படவில்லை. இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை பயன்ப டுத்தி ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் முயன்ற காரணத்தினால்தான் 30 வருடகால யுத்தத்திற்கு முகங்கொடு க்கவேண்டியதாயிற்று. சுதந்திரம் கிடைத்தபோது அப்போதிருந்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தி ருந்தால் இந்த நாடு இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. 1948ஆம் ஆண்டில் ஒருசதமேனும் கடனாளியாக இல்லா திருந்த எமது நாடு மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டாகிலும் கடனை செலுத்த முடியாதளவிற்கு எமது பொருளாதாரம் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. வருமானத்தை கடனுக்குச் செலுத்தினால் ஒருசதமேனும் எஞ்சியிருக்காது. எமக்கு என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.

எமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறினார்கள். எனவே நாடாளுமன்றில் 1952ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்ததைப் போன்று அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம். கட்சிகளுக்கு இடையிலுள்ள இனவாதம் தகர்த்தெறியப்பட்டு ஒன்று சேர்ந்துள்ளன. நமது நாடு சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் ஆகின்ற போதிலும் இலங்கை பிரஜை என்ற அடையாளத்தை உறுதிசெய்ய முடியாதுபோயுள்ளது. இந்தியாவில் 25 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநில ங்களிலும் வெவ்வேறு மொழிகள் உள்ளன. ஆனாலும் நாட்டை ஒன்றிணைத்து ஒரு நபர் வெளியில் சென்று பெருமையாகக் கூறும் வண்ணம் அந்த நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” - என்றார்.

பிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை

பிரான்ஸில் புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்று ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞர் ஒரு வரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இதுவரையில் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

புனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி

இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.


திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 120 தீயணைப்புப் படையினர் தீ பரவலைச் சமாளித்த பிறகு, அது கட்டுப்பாட்டில் வந்தது. பிரதமர் நரேந்திர மோதி இந்த தீ விபத்தால் கடும் துயர் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகப்படுகிறோம்,'' என்று பினோய் பெஹெர என்ற உள்ளூர் தீயணைப்பு படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இணையதளம் தெரிவித்துள்ளது.


ஒதிஷாவில் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்து தன்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
''இந்த தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியும் , '' என்று புவனேஸ்வர் காவல் துறை ஆணையர் யோகேஷ் குஹுரேய்னா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 106 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக வந்த செய்திகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று கூறின. ஆணையர் குஹுரேய்னா காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் இருந்தனர் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் நுழைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் கட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன
சில நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், ஜன்னல்கள் வழியாகக் கட்டிடத்தின் வெளியே குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்

மைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாக‌
ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்

அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

அந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.

மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.

தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்று
ஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.

இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ். ஒரு பிரச்சார காணொளி வெளியிட்டுள்ளது. அதில், ராணுவ நடவடிக்கைகள் மொசூல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

சீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்

இலங்கை –சீன உறவுகள் சாதகமான நிலையில் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்ன கர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார்.

அணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, மற்றும் குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

பாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடை முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டார்.இலங்கையில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் அவர் வரவேற்றுள்ளார்.

கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்

போர்க்குற்றத்துக்கு எதிரான அனைத்துலக விசாரணையினை தாம் ஏற்கப்போவதில்லை என மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். அதற்கு பல நாடுகளையும் ஆதாரமாக காட்டியுள்ளார்

குறிப்பாக, ஈராக்கில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரித்தானிய படையினருக்கு ஆதரவான நிலை ப்பாட்டை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கொண்டுள்ளதைப் போன்று, தாமும் இலங்கை படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப்போவதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஈராக்கிய மக்கள் சார்பு வழக்கறிஞர் குழுவொன்றால் பிரிட்டனின் படைச்சிப்பாய்கள் அவமானத்துக்கு உட்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தெரேசா மே தெரிவித்ததை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரி, இவ்விடயத்தில் ஐ.நா. இலங்கை தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தக் குற்ற விசாரணைகளில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாட்டை கடைப்பிடிக்குமாறு கூறி உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…