Super User Written by  كانون2 26, 2017 - 35155 Views

வவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார்

வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கடத்தப்பட்டு காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்க மான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகி ன்றது.

குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடை ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் நேற்று மூன்றாவது நாளாகவும், வவுனியா அஞ்சலகத்துக்கு முன்பாக, உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக, நேற்றுக்காலை பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர் தெரிவி த்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் நேற்றுமாலை மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Tagged under
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…