Super User Written by  حزيران 08, 2017 - 10878 Views

யாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் நேற்று மாலை­யில் வீசிய சுழல் காற்­றால் 21 வீடு­க­ளின் கூரை­கள் தூக்கி வீசப்­பட் டன. மழை கார­ண­மா­க­ குடா­நாட்­டில் பல இடங்­களில் பகல் மற்­றும் இரவு மின் தடைப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் நேற்று மாலை­யில் திடீ­ரென வீசிய சுழல் காற்­றால் பொம்­மை­வெளி , புதிய சோன­கத் தெருப் பகு­தி­க­ளில் 21 வீடு­க­ளின் கூரை­கள் முழு­மை­யா­கத் தூக்கி வீசப்­பட்­டன. மேலும் பல குடும்­பங்­க­ளும் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர்.

இதே­வேளை ஓர் வீட்­டின் கூரை­கள் காற்­றில் தூக்கி வீசப்­பட்­ட­வே­ளை­யில் அதன் அரு­கில் நிறுத்தி வைத்­தி­ருந்த வாக­னத்­தின்­மீது வீழ்ந்­த­மை­யால் அதன் கண்­ணாடி சேத­ம­டைந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நேற்­று­கா­லை­யி­லி­ருந்து பல இடங்­க­ளில் மின் தடைப்­பட்­டது. சாவ­கச்­சேரி, பருத்­தித்­துறை, வல்­வெட்­டித்­துறை, யாழ்ப்­பா­ணம் ஆகிய இடங்­க­ளில் மின் கம்­பி­கள் அறுந்­தன. வட­ம­ராட்­சிக்­கான மின் விநி­யோ­கம் இன்று காலைக்­குள் வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக மின்­சார சபை­யி­னர் கூறி­னர்.

வட்­டுக்­கோட்­டை­யில் மின் மாற்­றி­யில் ஏற்­பட்ட பெரு வெடிப்­புக் கார­ண­மாக மின் தடைப்­பட்­டது. அத­னால் அந்­தப் பிர­தே­சத்­தில் மின் விநி­யோ­கம் தடைப்­பட்­டது. மின்­சார சபை ஊழி­யர்­கள் அவற்­றைச் சீர­மைப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்­றும் மின்­சார சபை­யி­னர் தெரி­வித்­த­னர்.

நேற்று இரவு திடீ­ரெ­னப் பல இடங்­க­ளி­லும் மின் தடைப்­பட்­ட­த­னால் பெரும் அச­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­ட­தா­கப் பல­ரும் தெரி­வித்­த­னர்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…