Super User Written by  شباط 12, 2017 - 9856 Views

வடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு

நேற்று முன்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவத்தின் போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதிவலு கொண்ட இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 23 கிலோ கேரள கஞ்சாவை நேற்று மீட்டனர்.

இன்றைய தினம் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன், நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை பாராட்டியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த நடவடிக்கையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களால் நியமிக்கப்பட்ட மது ஒழிப்பு விசேட குழுவுடன் பளை பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்ட உயரதிகாரிகளின் வழி நடத்தலில் பளை பொலிஸாரால் பல இலட்சம் பெறுதியான கேரளா கஞ்சாக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…