Super User Written by  تشرين1 24, 2016 - 37139 Views

விரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களை கூட்டணியாக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக புதிய அரசியல் சக்தி அல்லது புதிய கட்சி அல்லது புதிய கூட்டணி என்பவற்றில் ஒன்றாக மிக விரைவில் கூட்டு எதிர்க் கட்சி வெளிவரும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜக்ஷ தெரிவித்தார்.

அரச தலைவர்களுக்கு இன்று நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனமில்லை. வெளிநாட்டுக்கு செல்லும் ஒரு தலைவர் அங்கு சொக்லட் சாப்பிட்டு விட்டு தனது மனைவிக்கும் ஒன்றை சேப்பில் போட்டுக் கொண்டு வருகின்றார்.

நாம் அரசாங்கம் அமைப்பது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்காகும். மாறாக, பழிவாங்குவதற்கு அல்ல எனவும் அவர் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறினார்.

தாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் FCID எனும் அமைப்பு செயற்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்
Tagged under
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…