மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.
தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்று
ஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.
இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். ஒரு பிரச்சார காணொளி வெளியிட்டுள்ளது. அதில், ராணுவ நடவடிக்கைகள் மொசூல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்று
ஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.
இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். ஒரு பிரச்சார காணொளி வெளியிட்டுள்ளது. அதில், ராணுவ நடவடிக்கைகள் மொசூல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஈராக்-மெசுல் நகரைக் கைப்பற்ற படை நடவடிக்கை
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரிடம் இருந்து மெசூல் நகரை மீண்டும் கைபற்றுவதற்காக, தாக்குதல் ஒன்றை இராக் படைப்பிரிவுகள் தொடங்கியுள்ளன.
இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.
அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.
இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3 லட்சம் படைப்பிரிவுகளும், ஆயுதக்குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மெசூல் நகரில் 4 முதல் 8 ஆயிரம் வரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு வாழும் 15 லட்சம் பேரின் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் அவை கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தோல்வியடைய செய்கின்ற இந்த முக்கியமான நேரத்தில் இராக்கிற்கு உதவ சர்வதேச கூட்டணி படை தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் தெரிவித்திருக்கிறார்.
இந்த தாக்குதலை அறிவித்தபோது, வெற்றிக்கான நேரம் வந்துவிட்டது என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறியிருக்கிறார்.
அது முதல் பீரங்கி குண்டு தாக்குதல் ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய அரசு குழுவினர் மெசூல் நகரை கைப்பற்றினர். இப்போது இந்த குழுவினரின் கடைசி வலுவிடமாக இது விளங்குகிறது.
இராக் மற்றும் அமெரிக்காவால் விமானத் தாக்குதல் நடத்தப்படும் இந்த நகரை சுற்றி, 3 லட்சம் படைப்பிரிவுகளும், ஆயுதக்குழுவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மெசூல் நகரில் 4 முதல் 8 ஆயிரம் வரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு வாழும் 15 லட்சம் பேரின் பாதுகாப்பு பற்றி ஐக்கிய நாடுகள் அவை கவலை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை தோல்வியடைய செய்கின்ற இந்த முக்கியமான நேரத்தில் இராக்கிற்கு உதவ சர்வதேச கூட்டணி படை தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் தெரிவித்திருக்கிறார்.
செளதி வான் தாக்குதலை கண்டித்து ஏமனில் பேரணி
செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது.
"கோப எரிமலை" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.
சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.
500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு செளதி ராணுவ தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான வான்வழித்தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
"கோப எரிமலை" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.
சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.
500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு செளதி ராணுவ தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான வான்வழித்தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.