டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றார். முன்னதாக துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். சம்பிரதாய நிகழ்வாக, நேற்றிரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள ஃப்ளேர் ஹவுஸில் ட்ரம்ப் தங்கினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் அனைவரும், இங்கு ஒருநாள் இரவு தங்குவது வழக்கம்.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் ட்ரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர்.

இதன்பிறகு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், அரவது மனைவி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு, அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சம்பிரதாய முறையில் தேநீர் விருந்து அளித்தனர். இதன்பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதிக்கு, ட்ரம்ப் மற்றும் ஒபாமா ஆகியோர் பாதுகாப்பு புடை சூழ காரில் பயணித்தனர். கேப்பிட்டல் ஹில் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும், அதிபர் தேர்தலில், ட்ரம்ப்பிடம் மோதி தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 10.15 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது அரசு சார்பில் பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை கொடுக்கப்பட்டது. மக்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து அவர் நன்றியுரையாற்றினார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலரி கிளிண்டனை மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

C.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை

அமெரிக்க சீஐஏ இயக்குனர் டொனால் ட்ரம்பினை எச்சரித்துள்ளார். இரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தான் கிழித்தெறியப் போவதாக டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியபடி அவர் நடந்து கொண்டால், அது பேரழிவாகவும், அதிகபட்ச முட்டாள்தனமாகவும் அமையும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான சிஐஏ அமைப்பின் இயக்குநர் ஜான் பிரன்னன்எச்சரித்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவின் வாக்குறுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும், சிரியாவில் வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டுமென்றும் ஜான் பிரன்னன் தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை விவகாரங்களில் அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஒபாமாவின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை டிரம்ப்பும், வரவிருக்கும் அவரது அரசும் கைவிடக்கூடாது என்று கேட்டுக் கொண்ட சிஐஏ இயக்குநர், இதில், டிரம்ப் நிர்வாகம் ஒழுங்கு மற்றும் மதிநுட்பத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், விசாரணை முறைகளில் ஒன்றாக விசாரணை செய்யப்படுபவர்களையும், சந்தேக நபர்களையும் நீரில் சித்ரவதை செய்யும் வாட்டர் போர்டிங் முறைக்கு எதிராகவும் ஜான் பிரன்னன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில்

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்

அமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா
ஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.

சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

குற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவாக இருக்கும் தற்போது, இந்த புதிய மின்னஞ்சல்களின் இருப்பு குறித்து வெளிப்படுத்த எஃப்.பி.ஐ அமைப்பின் இயக்குனரான ஜேம்ஸ் கோமி முடிவெடுத்தது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரிக்க எஃப்.பி.ஐ முடிவு எடுத்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளதாகவும், ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
எஃப்.பி.ஐ-யின் இந்த முடிவு குறித்து அதன் இயக்குனர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க நீதி துறை அதிகாரிகள் எச்சரித்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…