எமது நிலம் எமக்கே! கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்

மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு வருவதனை முன்னிட்டு கேப்பாப்புலவு மக்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளனர்.

ஆனால் மைத்திரிபால முல்லைத்தீவுக்கு வரவில்லை என்றாலும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்து. முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை தி இன்றைய தினம் விடுவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் மக்கள் எதிர்ப்பினால் மைத்திரிபால வரவில்லை.

எனினும், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை என்றும் மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகள்தான் விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளன என்றும் கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு அவையும் விடுவிக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்

வட தமிழீழத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.

தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ் மக்கள்:ஐ முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.

படையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.

முன்னாள் சிங்கள இராணுவ தளபதிகள் ஐந்து பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் மஹிந்த மைத்திரி ஆகியோரின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படவுள்ளது.

இந்த தளபதிகள் மீது பெருமளவான போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தபோதும் அவற்றை புறந்தள்ளிவிட்டு நிதிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே விசாரணைப் பிரிவு மற்றும் இரகசியப் பொலிஸ் திணை க்களம் என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர சமரசிங்க, வசந்த கரன்னாகொட, ஜயநாத் கொலம்பகே, ஜயந்த பெரேரா மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோர் இவ்வாறு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசியல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடல், எவன்கார்ட் நிறுவனத்துக்கு உதவுதல், 5 மாணவர்களுடைய காணாமல் போதல், இராணுவ படையின் நலன்புரி விடயங்களுக்கு டெலிகொம் நிறுவனத்திடம் 50 மில்லியன் ரூபா பெற்றுக் கொண்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்த ஒரு பாதுகாப்புப் பிரிவு அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு பிரதா னிக்கு 3 லட்சம் ரூபா பெறுமதியான டொலெக்ஸ் சுவிஸ் கைக்கடிகாரம் ஒன்றை வழங்கியுள்ளமை தொடர்பிலான தகவலும் வெளியாகியுள்ளது.

குறித்த பாதுகாப்புத்துறை பிரதானிக்கு எதிராக பாதுகாப்புத் துறை அதிகாரி இரகசியப் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்குப் பின்னால் முன்னாள் பாதுகாப்பு பிரதானியொருவர் காண ப்படுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வாக்கு மூலம் பெறப்பட்ட முன்னாள் பாதுகாப்பு பிரதானி தொடர்பில், சட்ட மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…