Super User Written by  Nov 17, 2016 - 126015 Views

மாலைதீவுகு விபச்சாரத்திற்காக பெண்களை அனுப்பியவர்கள் கைது

மாலைதீவில் உள்ள பிரபல செல்வந்தர்களுக்கு விபசாரத்திற்காக இலங்கையில் இருந்துபெண்களை அனுப்பி வந்த கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விபசாரத்திற்காக மாலைதீவிற்கு இவர்கள் அனுப்பிவைத்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பத்தரமுல்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்ததுள்ளது.

இரு சந்தேகநபர்களும் நூற்றுக்கும் அதிகமான பெண்களை விபசாரத்திற்காக மாலைத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் சுற்றுலா வீசாவில் பெண்களை மாலைத்தீவிற்கு அனுப்பிவந்துள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவல நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…