Super User
டொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர்
                  அமெரிக்காவிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா
ஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.
சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
குற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
                        இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல்: அதிபர் ஒபாமா
ஆதரவு ஊசலாடும் மாநிலம் என்று கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான, வட கரோலினாவில் மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அதிபர் ஒபாமா, அடுத்த அமெரிக்க அதிபராக ஹிலரி தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், கடந்த எட்டு ஆண்டுகளில் தான் அதிபராக இருந்த போது அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பின் தள்ளப்படும் என்றார்.
சிறுபான்மை குழுக்களின் சிவில் உரிமைகளை ட்ரம்ப் பலவீனமாக்குவார் என்றும், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி பொறுப்பை வகிக்க ட்ரம்ப் தகுதியற்றவர் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அடுத்த வாரம் நடைபெறக்கூடிய அதிபர் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றுவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடிக்கு அமெரிக்கா தள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
குற்றவியல் விசாரணைகளால் பாதிக்கப்படும் அதிபராக ஹிலரி இருப்பார் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை
                  கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றாம் வருட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மாணவர்கள் மத்தியில் பல எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பில் மாணவர்கள் ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கூடாக மட்டுமே தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இவ்வாறு யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட ஆசிரியர் விஜயகுமார் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ் பல்கலையில் நடைபெற்ற விசேட பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த படுகொலை சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். மற்றைய மாணவனின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆயினும் மாணவர்கள் அதை கொலை என்றே நம்புகின்றனர். ஏனெனில் தூப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னர் நடைபெற்ற செயற்பாடுகள் மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளன.
இவ்விரு மாணவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது விபத்து நடந்ததாகவே பொலிஸார் தெரிவித்தனர். எனவே, தூப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட தடயங்களை அழிப்பதற்காகவே இரண்டாவது மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாமென மாணவர்கள் கருதுகின்றனர்.
மேலும், பொலிஸார் மருத்துவ அறிக்கை வந்ததன் பின்னரே இறந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து இச்சம்பவம் தொடர்பாக வருந்துவதாகவும் மாணவர்களின் இறுதிச் சடங்கிற்குரிய செலவினை தாம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். பல்கலை மாணவர்கள் தமது நண்பர்களை இழந்திருந்தாலும் மிகவும் நிதானமான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அந்தவகையில், யாழ் மாவாட்ட செயலக முற்றுகை, பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம் ஆகியன அமைந்திருந்தன எனவு சிரெஷ்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
                        இன்று புதன்கிழமை யாழ் பல்கலையில் நடைபெற்ற விசேட பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த படுகொலை சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். மற்றைய மாணவனின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆயினும் மாணவர்கள் அதை கொலை என்றே நம்புகின்றனர். ஏனெனில் தூப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னர் நடைபெற்ற செயற்பாடுகள் மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளன.
இவ்விரு மாணவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது விபத்து நடந்ததாகவே பொலிஸார் தெரிவித்தனர். எனவே, தூப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட தடயங்களை அழிப்பதற்காகவே இரண்டாவது மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாமென மாணவர்கள் கருதுகின்றனர்.
மேலும், பொலிஸார் மருத்துவ அறிக்கை வந்ததன் பின்னரே இறந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து இச்சம்பவம் தொடர்பாக வருந்துவதாகவும் மாணவர்களின் இறுதிச் சடங்கிற்குரிய செலவினை தாம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். பல்கலை மாணவர்கள் தமது நண்பர்களை இழந்திருந்தாலும் மிகவும் நிதானமான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அந்தவகையில், யாழ் மாவாட்ட செயலக முற்றுகை, பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம் ஆகியன அமைந்திருந்தன எனவு சிரெஷ்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
மாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா?
                  கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு , கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31), பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையில், மாணவர்கள் ஈடுபட்டனர். 
இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந் நிலையில் ஜனாதிபதியை சந்தித்த 16 மாணவர்களும், தங்கள் கோரிக்கைகளை, ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். இதன்போது, குறித்த விவகாரம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவுறுத்தி, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக, ஜனாதிபதி உறுதியளித்ததோடு, இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார். அத்தோடு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உண்மையில் பாதிக்கப்பட்ட மாணவ குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்குள் முடிவு கிடைக்குமா? அல்லது நீதி கிடைக்குமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஏனென்றால் கடந்த காலல்ங்களில் சிங்கள நிர்வாகம் எந்தவொரு நிதியான நடவடிக்கைகளையும் செய்யவில்லை மாறாக குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளையே செய்து வந்துள்ளது.
                        இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந் நிலையில் ஜனாதிபதியை சந்தித்த 16 மாணவர்களும், தங்கள் கோரிக்கைகளை, ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். இதன்போது, குறித்த விவகாரம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவுறுத்தி, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக, ஜனாதிபதி உறுதியளித்ததோடு, இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார். அத்தோடு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உண்மையில் பாதிக்கப்பட்ட மாணவ குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்குள் முடிவு கிடைக்குமா? அல்லது நீதி கிடைக்குமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஏனென்றால் கடந்த காலல்ங்களில் சிங்கள நிர்வாகம் எந்தவொரு நிதியான நடவடிக்கைகளையும் செய்யவில்லை மாறாக குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளையே செய்து வந்துள்ளது.
வாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை
எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு பண்பான, படித்த சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்தது. ஆனால் அந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை.
வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில்இடம்பெற்றது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்றுச் செவ்வாய்க்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில்இடம்பெற்றது, அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
அண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள், நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள்.
குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும், ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது.
              விசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி
                  மாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணை பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படும் என மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார்.
மாணவர்கள் கொல்லப்பட்டபோது வடபகுதி மக்கள் அமைதியாக செயற்பட்டதாகவும் அதற்காக தான் நன்றி தெரிவித்துக் கொள்வ தாகவும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்ள இடம்பெயர் முகாம் மக்களுக்காக கீரிமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.
'அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது மரணம் சம்பவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் உட்பட உயரதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்தேன். மேலும் விசேட விசாரணைக் குழுவொன்றையும் நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தேன். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிவோம்.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன். விசேடமாக சக மாணவர்களது மரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களது மனதை தாக்கியுள்ளது. எமது நாட்டில் மக்கள் தமது சுதந்திரத்தையும், உரிமைகளையும் ஜனநாயக ரீதியாக பயன்படுத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மக்கள் அமைதியாக செயற்பட்டதை இட்டு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். அதேபோன்று இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகையில் ஊடகங்கள் செயற்படுகின்ற விதம் குறித்து நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டு மக்களின் மனங்களில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டு இனங்களுக்கு இடையே பிளவு ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. இறுதியில் அது யுத்தமாக உருவெடுத்தது.
30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். நம் அனைவருக்கும் இதில் பயணித்த அனுபவம் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. அதற்கான சிறந்த தருணம் இதுவே என்று நான் கூறுகின்றேன். இதுபற்றி பலர் பலவிதமாக அரசியல் வியாக்கியானங்களை கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையை அவர்கள் குறைவாக மதிப்படுகின்றனர். எனினும் இவை அனைத்தும் குறைமதிப்பிடவும், குறை பெறுமதியிடப்படவும் முடியாத ஒன்றாயிருக்கின்றது' - என்றார்.
இதேவேளை மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்காத வகையிலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியலமைப்பை உருவாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி இதன்போது சூளுரைத்தார்.
'கடந்த 50,60 வருடங்களான எமக்கு அனுபவம் இருக்கின்றது. எனவே இப்படியான சந்தர்ப்பத்தினால்தான் நாடு என்ற அடிப்படையில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அரசியலமைப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு வரைபுபடுத்தி வெளியிடுவதற்கு முன்னரே பலர் பிழையான வகையில் விமர்சிக்கின்றனர். விசேடமாக மகாநாயக்கர்களையும், பிக்குமார்களையும் விகாரை தோரும் சென்று பிழையான கருத்துக்களை விம்பத்தை விதைக்கின்றனர். பௌத்த மதத்திலேயே கைவைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். அதேபோன்று நாட்டை காட்டிக்கொடுக்கவும், யுத்தத்தில் மீட்கப்பட்ட இந்த நாட்டை பிளவுபடுத்தவும் முயற்சிக்கின்றோம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நான் முற்றாக நிராகரிக்கின்றேன். சிலர் உலகத்திலுள்ள சில நாடுகளில் காணப்படுகின்ற அரசியலமைப்புக்களை சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.
ஆனாலும் வேறு நாடுகளில் உள்ள அரசியலமைப்புக்கள் எமக்குத் தேவையில்லை. மாறான எமது நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றையே தயாரிக்க வேண்டும். நாங்கள் இந்த சவாலை வென்றுகொள்ள வேண்டும். இந்த பூமியில் மீண்டும் இரத்த ஆறு ஓடக்கூடாது. எனவே அனைத்து ஊடகங்களும் சரியானதை மக்களிடையே கொண்டுசெல்ல பொறுப்புடன் செயற்பட வேண்டும்' - என்றார்.
                        மாணவர்கள் கொல்லப்பட்டபோது வடபகுதி மக்கள் அமைதியாக செயற்பட்டதாகவும் அதற்காக தான் நன்றி தெரிவித்துக் கொள்வ தாகவும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்ள இடம்பெயர் முகாம் மக்களுக்காக கீரிமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.
'அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது மரணம் சம்பவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் உட்பட உயரதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்தேன். மேலும் விசேட விசாரணைக் குழுவொன்றையும் நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தேன். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிவோம்.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன். விசேடமாக சக மாணவர்களது மரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களது மனதை தாக்கியுள்ளது. எமது நாட்டில் மக்கள் தமது சுதந்திரத்தையும், உரிமைகளையும் ஜனநாயக ரீதியாக பயன்படுத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மக்கள் அமைதியாக செயற்பட்டதை இட்டு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். அதேபோன்று இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகையில் ஊடகங்கள் செயற்படுகின்ற விதம் குறித்து நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டு மக்களின் மனங்களில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டு இனங்களுக்கு இடையே பிளவு ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. இறுதியில் அது யுத்தமாக உருவெடுத்தது.
30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். நம் அனைவருக்கும் இதில் பயணித்த அனுபவம் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. அதற்கான சிறந்த தருணம் இதுவே என்று நான் கூறுகின்றேன். இதுபற்றி பலர் பலவிதமாக அரசியல் வியாக்கியானங்களை கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையை அவர்கள் குறைவாக மதிப்படுகின்றனர். எனினும் இவை அனைத்தும் குறைமதிப்பிடவும், குறை பெறுமதியிடப்படவும் முடியாத ஒன்றாயிருக்கின்றது' - என்றார்.
இதேவேளை மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்காத வகையிலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியலமைப்பை உருவாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி இதன்போது சூளுரைத்தார்.
'கடந்த 50,60 வருடங்களான எமக்கு அனுபவம் இருக்கின்றது. எனவே இப்படியான சந்தர்ப்பத்தினால்தான் நாடு என்ற அடிப்படையில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அரசியலமைப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு வரைபுபடுத்தி வெளியிடுவதற்கு முன்னரே பலர் பிழையான வகையில் விமர்சிக்கின்றனர். விசேடமாக மகாநாயக்கர்களையும், பிக்குமார்களையும் விகாரை தோரும் சென்று பிழையான கருத்துக்களை விம்பத்தை விதைக்கின்றனர். பௌத்த மதத்திலேயே கைவைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். அதேபோன்று நாட்டை காட்டிக்கொடுக்கவும், யுத்தத்தில் மீட்கப்பட்ட இந்த நாட்டை பிளவுபடுத்தவும் முயற்சிக்கின்றோம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நான் முற்றாக நிராகரிக்கின்றேன். சிலர் உலகத்திலுள்ள சில நாடுகளில் காணப்படுகின்ற அரசியலமைப்புக்களை சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.
ஆனாலும் வேறு நாடுகளில் உள்ள அரசியலமைப்புக்கள் எமக்குத் தேவையில்லை. மாறான எமது நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றையே தயாரிக்க வேண்டும். நாங்கள் இந்த சவாலை வென்றுகொள்ள வேண்டும். இந்த பூமியில் மீண்டும் இரத்த ஆறு ஓடக்கூடாது. எனவே அனைத்து ஊடகங்களும் சரியானதை மக்களிடையே கொண்டுசெல்ல பொறுப்புடன் செயற்பட வேண்டும்' - என்றார்.
கடத்திவரப்பட்ட 75 கிலோ கஞ்சா பிடிபட்டது
                  இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 75 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள், காரைநகர் கட ற்பரப்பில் கைப்பற்றப்பட்டதுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
படகில் நேற்று (திங்கட்கிழமை) மாலை கடத்திவரப்பட்ட குறித்த கஞ்சா போதைப்பொருள், காரைநகரிலிருந்து மன்னாருக்கு கட த்திச் செல்லப்படவிருந்தநிலையில் , விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேலணை, மன்னார், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வுள்ளனர்.
                        படகில் நேற்று (திங்கட்கிழமை) மாலை கடத்திவரப்பட்ட குறித்த கஞ்சா போதைப்பொருள், காரைநகரிலிருந்து மன்னாருக்கு கட த்திச் செல்லப்படவிருந்தநிலையில் , விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேலணை, மன்னார், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வுள்ளனர்.
சிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை
                  இஸ்லாமியவாதக் குழுவான, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த எட்டு சிறைக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்பா.
போபால் நகர மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சிறைச் சுவர்களில் ஏறித் தப்பிய 8 சிறைக் கைதிகளே இவ்வாறு சுட்டுக் கொல்லபப்ட்டனர்.
இவர்கள் சிறைக்காவலரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
தப்பியோடிய இவர்கள் அனைவரும் போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை வளையத்தை ஊடுருவிச் செல்ல முயன்றனர், என்றார் அவர்.
இன்று ( திங்கட்கிழமை ) அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக போபால் நகர மூத்த போலிஸ் அதிகாரி ராமா சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மும்பையில் 2003ம் ஆண்டு நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்த இயக்கத்தினரே பொறுப்பு என்று இந்திய அரசு கூறியது. இத்தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். சிமி இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இதே போன்ற ஒரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தில், 201ம் ஆண்டு, ஆறு சிமி இயக்க உறுப்பினர்கள் உட்பட 7 சிறைக்கைதிகள், சிறைக் கழிப்பறை சுவரை உடைத்தத்தப்பியோடினர். அவர்களில் ஒருவர் பின்னர் கண்ட்வா மாவட்டத்தின் சிறை அருகேயே கைது செய்யப்பட்டார்.
                        போபால் நகர மத்திய சிறையிலிருந்து, சிறைக்காவலர் ஒருவரைக் கொன்றுவிட்டு, படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி சிறைச் சுவர்களில் ஏறித் தப்பிய 8 சிறைக் கைதிகளே இவ்வாறு சுட்டுக் கொல்லபப்ட்டனர்.
இவர்கள் சிறைக்காவலரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
தப்பியோடிய இவர்கள் அனைவரும் போபாலின் புற நகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று போபாலின் தலைமை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் சௌத்ரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அவர்களை சரணடையச் சொன்னோம், ஆனால் அவர்கள் போலிஸ் முற்றுகை வளையத்தை ஊடுருவிச் செல்ல முயன்றனர், என்றார் அவர்.
இன்று ( திங்கட்கிழமை ) அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக போபால் நகர மூத்த போலிஸ் அதிகாரி ராமா சிங் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மும்பையில் 2003ம் ஆண்டு நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்த இயக்கத்தினரே பொறுப்பு என்று இந்திய அரசு கூறியது. இத்தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். சிமி இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இதே போன்ற ஒரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தில், 201ம் ஆண்டு, ஆறு சிமி இயக்க உறுப்பினர்கள் உட்பட 7 சிறைக்கைதிகள், சிறைக் கழிப்பறை சுவரை உடைத்தத்தப்பியோடினர். அவர்களில் ஒருவர் பின்னர் கண்ட்வா மாவட்டத்தின் சிறை அருகேயே கைது செய்யப்பட்டார்.
வடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி?
                  முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப்போக்கை வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை கடைப்பிடிப்பதாக எம்.ஏ.சுமந்திரன்குற்றம் சாட்டியு ள்ளார்..
வடமாகாண சபையின் இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அது மாறாது இருக்குமானால் வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் ஒழுங்காக நடைபெறாது என்ற உண்மையை அவர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்காக எப்படி உழைத்தாலும் அவர்கள் சுமந்திரனுக்கு வாக்கு போடமாட்டார்கள் அல்லது தமிழர்கள் தமது உரிமையினைப்பெற ஆதரவு கொடுக்கவும் மாட்டார்கள் என்பது சுமந்திரனுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
 
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீழ்குடியேற்றங்களே ஆமைவேகத்தில்தான் நடக்கின்றது அதற்கு காரணம் வடமாகாணச் அபை அல்ல சிங்கள அரசாங்கமே காரணம் என்பதும் சுமந்திரனுக்கு தெரியும்.
இவ்வாறு நிலமை இருக்க சுமந்திரன் ஏன் வடமாகாண சபையினை குற்றம் சுமத்துகின்றார் என்பது மக்களுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
                        வடமாகாண சபையின் இந்த நிலை மாறவேண்டும் என தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அது மாறாது இருக்குமானால் வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றமும் ஒழுங்காக நடைபெறாது என்ற உண்மையை அவர்களும் உணரவேண்டும் எனவும் தெரிவித்து ள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்காக எப்படி உழைத்தாலும் அவர்கள் சுமந்திரனுக்கு வாக்கு போடமாட்டார்கள் அல்லது தமிழர்கள் தமது உரிமையினைப்பெற ஆதரவு கொடுக்கவும் மாட்டார்கள் என்பது சுமந்திரனுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீழ்குடியேற்றங்களே ஆமைவேகத்தில்தான் நடக்கின்றது அதற்கு காரணம் வடமாகாணச் அபை அல்ல சிங்கள அரசாங்கமே காரணம் என்பதும் சுமந்திரனுக்கு தெரியும்.
இவ்வாறு நிலமை இருக்க சுமந்திரன் ஏன் வடமாகாண சபையினை குற்றம் சுமத்துகின்றார் என்பது மக்களுக்கும் தெரியும் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
மாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்
                  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உரிய விசாரணை கோரி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.
மாணவர்களால் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலை க்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவி யலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.
இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால்முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலை க்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்திஅரசரட்ணம், மற்றும் பீடாதிபதிகள் பல்கலைக்கழக த்திற்கு உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தம்மை உள்ளேவிடுமாறு மாணவர்களை துணைவேந்தர் கேட்டவேளை அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இருபகுதியினருக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்ட ங்களை நடத்தினால் அனைவரதும் எதிர்காலம் வீணாவதுடன் பல்கலைக்கழகத்தையும் மூடவேண்டிய நிலையும் ஏற்படலா மெனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.இந்த சம்பவங்களை பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீடியோ கம ராவினை பறிக்க முற்பட்டுள்ளார் துணைவேந்தர்.அத்துடன் துணைவேந்தருடன் வேட்டியுடன் நின்ற விரிவுரையாளர் என கருத ப்படும் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கி சரமாரியாக சிங்களமொழியில் ஏசினார்.
                        மாணவர்களால் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலை க்கழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவி யலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததனால் அவர்கள் அனைவரும் அவ்விடத்திலிருந்து வெளியேறி சென்றுவிட்டனர்.
இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால்முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலை க்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் வசந்திஅரசரட்ணம், மற்றும் பீடாதிபதிகள் பல்கலைக்கழக த்திற்கு உட்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தம்மை உள்ளேவிடுமாறு மாணவர்களை துணைவேந்தர் கேட்டவேளை அதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இருபகுதியினருக்குமிடையே வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் மாணவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்ட ங்களை நடத்தினால் அனைவரதும் எதிர்காலம் வீணாவதுடன் பல்கலைக்கழகத்தையும் மூடவேண்டிய நிலையும் ஏற்படலா மெனவும் துணைவேந்தர் தெரிவித்தார்.இந்த சம்பவங்களை பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீடியோ கம ராவினை பறிக்க முற்பட்டுள்ளார் துணைவேந்தர்.அத்துடன் துணைவேந்தருடன் வேட்டியுடன் நின்ற விரிவுரையாளர் என கருத ப்படும் ஒருவர் ஊடகவியலாளர்களை நோக்கி சரமாரியாக சிங்களமொழியில் ஏசினார்.
ஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும் அதிசயம்
                  வட தமிழீழத்தில் சிங்கள புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.
தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ் மக்கள்:ஐ முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.
                        உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு செய்ய முடியாதுள்ளதாகவும் இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உருவாகி வருவது ஆபத்தானது என புலனாய்வுத்துறை அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டி யுள்ளது.
தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையினை குளப்பும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த ஆவா குழுவினை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த அனுமதி கோருவது தமிழ் மக்கள்:ஐ முட்டாள்களாக்கும் செயலே தவிர வேறொன்றும் இல்லை.
			
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
                    