×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 984

உலகம்

விமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்

சிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி

சுவிட்ஸர்லாந்தில் இரு தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம், நேற்று முன்தினம் அந்நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.சுவிஸ்வாழ் இலங்கை தமிழர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தமிழர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழ ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள்…

இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்யவேண்டும் - வத்திக்கான் விளக்கம்

இறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை வத்திக்கான் அளித்துள்ளது.வத்திக்கான்.ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள், தாங்கள் மிகவும் நேசித்தவர்களை தகனம் செய்த பிறகு அந்தச் சாம்பலை தூவுவதோ அல்லது வீட்டில் வைத்துக்கொள்ளுவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.அந்த வழிகாட்டுதலில், தகனம் செய்யப் பட்டவர்களின் சாம்பலை ஒரு தேவாலயம் அல்லது கல்லறையில் செலுத்துமாறு கூறியுள்ளது.அவை தான் அவர்களின் சேமிப்பை அர்ப்பணிக்க ஒரு புனிதமான இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை அடக்கம் செய்வதைத் தான் விரும்புகிறது என்றாலும் , அது…

மொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு

,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.மொசூலின்…

மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிடம் இருந்து மொசூல் நகரத்தை மீட்கும் முயற்சியில் இராக் ராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு இரண்டாம் நாளாக ராணுவ நடவடிக்கை தொடர்கிறது.தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக, தீவிரவாதிகள் பிடியில் உள்ள இடங்களில் ராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மொசூலில் வான் வழித் தாக்குதல்களை, சர்வதேச கூட்டணி நடத்தியுள்ளது என்றுஒரு அமெரிக்க தளபதி உறுதி அளித்துள்ளார்.இதுவரை கூட்டணி படைகள் மூலம் வெற்றிகள் பெரும்பாலும், அடையாளபூர்வமானவை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ். ஒரு…

டைசனின் 15 வயது மகள் சுட்டுக்கொலை

அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார்லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர்.இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின்…

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…