Super User Written by  تشرين1 15, 2016 - 21979 Views

மைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம் Featured

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்

8ஆவது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டின் தலைமைப் பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடை த்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநா ட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்தியா. சீனா ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களா தேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் மாலைதீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Tagged under
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…