Super User Written by  حزيران 12, 2017 - 7990 Views

போர்க்குற்றச்சாட்டு: சிங்கள படைகளுக்கு அனுமதிமறுப்பு

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தினால் ஐ.நா. அமை­திப் படை­யில் இணைந்து கொள்­வ­தற்கு 360 சிங்கள‌ இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அனு­மதி மறுக்­கப் பட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

மாலி­யில் ஐ.நா. அமை­திப் படை­யில் பணி­யாற்­று­வ­தற்­காக 212 இரா­ணு­வத்­தி­ன­ரைக் கவச வாக­னங்­கள் மற்­றும் ஆயு­தங்­க­ளு­டன் தருமாறு ஐ.நா. கோரியிருந்தது. இதற்கா கத் தெரிவு செய்யப்பட்ட 400 படையினரைக் கொண்ட பட்டியல் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்டது.

இதில் 40 பேரை மட்டுமே ஐ.நா அங்கீகரித்துள்ளது. ஏனையவர்கள் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில், நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

மாலியில் இராணுவத்தினருக்கான கட்டளை அதிகாரியாகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்ட கேணல் சமந்த விக்கிரமசேனவின் பெயரும் ஐ.நாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வாகனங்களுடன் படையினர் தர நியமனங்களுக்கேற்ப உள்ளனரா என்பதை, ஆய்வு செய்ய ஐ.நா குழுவொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…