வவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார்

வடக்கில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கடத்தப்பட்டு காணாமற் போன உறவுகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்க மான பதிலைத் தரவேண்டுமென வலியுறுத்தி நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகி ன்றது.

குறித்த போராட்டமானது வடக்கில் காணாமற் போனோர் பாதுகாவலர் சங்கதினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் வடக்கில் யுத்த காலத்தில் காணாமற் போன நபர்களின் உறவுகளால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடை ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 14 பேர் நேற்று மூன்றாவது நாளாகவும், வவுனியா அஞ்சலகத்துக்கு முன்பாக, உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் சிலரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக, நேற்றுக்காலை பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர் தெரிவி த்திருந்தார்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர் நேற்றுமாலை மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை

அரச சார்பற்ற அமைப்பு ஒன்றிடம் இருந்து கடனைப்பெற்ற மீழ்குடியேற்ற இளந்தாய் ஒருவர் கடனை மீழ செலுத்தமுடியாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இந்த தாய் தனது ஆண் குழந்தையுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று புதன்கிழமை வீட்டைவிட்டு தனது இரண்டாவது ஆண்குழந்தையுடன் வெளியில் சென்ற இந்தப் பெண் வீடு திரும்பாததையடுத்து, அவருடைய கணவனும் உறவினர்களும் தேடியபோது இன்று காலை அவர் கிணற்றில் குழந்தையுடன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டிருக்கின்றது.


அயல் கிராமமாகிய பன்றிக்கெய்தகுளத்தில் பாவனையற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இறந்தவர்கள் நாகநாதன் சுகந்தினியும், அவருடைய மகனான நாகநாதன் கிந்துஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறியுள்ள பல குடும்பங்கள் அவர்களுக்கேற்ற வாழ்வாதார உதவிகள் கிடைக்காத காரணத்தினால் நுண்கருத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற நுண்கடன் உதவிகளைப் பெற்று வருகின்றனர்.

ஆயினும் அந்த உதவிகளின் மூலம் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் அவர்கள் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துத் திரும்பியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…