புனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி

இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒதிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.


திங்கள் அன்று மாலையில் தொடங்கிய தீ, பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எஸ்.யு.எம். (SUM) மருத்துவமனையில், டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 120 தீயணைப்புப் படையினர் தீ பரவலைச் சமாளித்த பிறகு, அது கட்டுப்பாட்டில் வந்தது. பிரதமர் நரேந்திர மோதி இந்த தீ விபத்தால் கடும் துயர் அடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்குக் காரணம் என்று சந்தேகப்படுகிறோம்,'' என்று பினோய் பெஹெர என்ற உள்ளூர் தீயணைப்பு படையைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இணையதளம் தெரிவித்துள்ளது.


ஒதிஷாவில் மருத்துவமனையில் நேர்ந்த தீ விபத்து தன்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று டிவிட்டர் செய்தியை வெளியிட்டார் பிரதமர் மோதி.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புகை மூட்டத்தால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
''இந்த தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியும் , '' என்று புவனேஸ்வர் காவல் துறை ஆணையர் யோகேஷ் குஹுரேய்னா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 106 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக வந்த செய்திகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று கூறின. ஆணையர் குஹுரேய்னா காயமடைந்தவர்கள் பலர் மிக ஆபத்தான நிலையில் இருந்தனர் என்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்.

தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் நுழைய கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் கட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பித்தன
சில நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அச்சமடைந்த நிலையில், ஜன்னல்கள் வழியாகக் கட்டிடத்தின் வெளியே குதிக்க முயற்சி செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மோடி-புட்டின் ஒப்பங்கள் கைச்சாத்து

இந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் கோவா துணை முதல்வர் பிரன்சிஸ் டிசோசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையேயான 17ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றியும் அதில் உயிரிழந்த 19 இந்திய வீரர்கள் பற்றியும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தையிலும் அவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடையேயான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை:

மைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.இதில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்

8ஆவது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டின் தலைமைப் பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடை த்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநா ட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்தியா. சீனா ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களா தேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் ஆப்கானிஸ்தான் மாலைதீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…