போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் - கோத்­த­பாய ராஜ­பக்ச பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ராக இருந்த காலத்­தில்­தான் எமது உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இதனைத் தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளது.

எனவே, மகிந்­த­வை­யும், கோத்­த­பா­ய­வை­யும் உடன் கைது­செய்து கைய­ளிக்­கப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை இந்த அரசு விசா­ர­ணை­யின் ஊடாக வெளிப்­ப­டுத்த வேண்­டும். குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­க­வேண்­டும்.இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.

காணா­மற்ேபா­ன­வர்­கள் அல்­லது கடத்­தப்­பட்­ட­வர்­க­ளில் பலர் அன்­றைய தினமே கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம். மகிந்த அர­சில் இடம்­பெற்ற அனைத்­துக் கொலை­கள் மற்­றும் கடத்­தல்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தே உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னைப் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்சவே முன்­னெ­டுத்­துள்­ளார் என்று கொழும்­பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்திப்பில் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். எனவே, மகிந்­த­வுக்­கும் கோத்­த­பா­ய­வுக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க தற்­போ­தைய அரசு ஏன் தயக்­கம் காட்­டு­கின்­றது?” என்­றும் அவர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

கைய­ளிக்­கப்­பட்டுக் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தரு­மா­றும், அவர்­க­ளு­டைய உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மா­றும் வலி­யு­றுத்தி, வடக்கு மாகா­ணத்­தில் அற­வ­ழிப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து செல்­கின்­றன.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று 26 ஆவது நாளா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் நேற்று 22 ஆவது நாளா­க­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நேற்று 10ஆவது நாளா­க­வும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நேற்று 3ஆவது நாளா­க­வும் போராட்­டங்­கள் தொடர்ந்­தன.

இந்­தப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுள்ள உற­வி­னர்­கள் அனை­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா? இல்­லையா? இருந்­தால் எங்கு உள்­ள­னர்? இல்லை என்­றால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­பதை அரசு வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை விடுத்­துள்­ள­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில், கடந்த சில நாள்­க­ளா­கக் கடும் மழை பெய்­த­போ­தும், மக்­கள் போராட்­டத்­தைக் கைவி­ட­வில்லை. அவர்­க­ளால் அமைக்­கப்­பட்ட தக­ரக் கூடா­ரத்­துக்­குள் ஒதுங்கி இருந்து, உறு­தி­யு­டன் தமது அற­வ­ழிப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • عنوان البريد الإلكتروني هذا محمي من روبوتات السبام. يجب عليك تفعيل الجافاسكربت لرؤيته.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…