40 பேருடன் தமிழ் அகதிகள் படகு கிறிஸ்மஸ் தீவில் தரை தட்டியது

ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
Aus boat
இலங்கை தமிழ் அகதிகள் 40 பேர் கப்பல் ஒன்றில் கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்ததாக அவுஸ்ரேலிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்ட இவர்கள் நேற்று கிறிஸ்மஸ் தீவுக்கு வந்தடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
நான்கு நாட்களாக உணவு, குடி நீர், மருந்து இன்றி இவர்கள் படகில் இருந்ததாகவும் கூடவே சின்னம்மை, வாந்திபேதி என்பனவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவுஸ்ரேலிய அகதிகள் சபை அதிகாரி திரு. ரிந்தோல் கூறியுள்ளார்.