விகுதாசார தேர்தல் முறை ஒத்துவராது விரைவில் மாற்றவேண்டும் - டியூ குணசேகரா

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
எமது நாட்டிற்கு விகுதாசார தேர்தல் முறைமை சரிவராது அதனை மாற்றவேண்டும். தேர்தல் முறையே தேர்தல் வன்முறைகளுக்கு காரணம் என கூறியுள்ளார் யாப்பு மறு சீரமைப்பு அமைச்சர்.
புதிய பாராளுமன்றம் அமைந்தவுடன் 1978 இற்கு முன்பு இருந்த தேர்தல் தொகுதிவாரியான தேர்தல் முறைமை அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறியுள்ளார் டியூ குணசேகரா.  மஹிந்த இரஸ்யாவில் இருந்து வந்தவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அதன் பின்னர் ஏப்ரல் நடுப்பகுதியில் தேர்தல் நடாத்தப்படும் எனவும் கூறியுள்ளார் அமைச்சர்.