வார இறுதியில் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு ஆராயும் - எம்.பி துரை ரடணசிங்கம்

திங்கட்கிழமை, பெப்ரவரி 8, 2010
TNA
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இந்தவார இறுதியில் கலந்தாலோசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய முக்கிய உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் நாளை நாடு திரும்பக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்தாலோசித்த பின்னர் தேர்தலில் தமது நிலைப்பாடுகள் குறித்து அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.