வவுனியா அரச அதிபருடன் சீன தூதுவர் பேச்சு

வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர், வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் சந்தித்து கலந்துரையாடியதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கத்தினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்களையும் சீன உயர்ஸ்தானிகர் பார்வையிட்டதாகவும் வவுனியாச் செய்திகள் குறிப்பிடுகின்றன.