யாழ் பொலிஸ் அத்தியட்சகர் சாள்ஸ் விஜெயவர்த்தன கொலை சந்தேக நபர் கைது.

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
Arrest
2005 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட யாழ் குடா நாட்டு பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சாள்ஸ் விஜெயவர்தனவின் வழக்கின் முக்கிய சந்தேக நபரை தாம் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.