முன்நாள் பிள்ளையான் குழுவை சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பில் கைது

ஞாயிற்றுகிழமை, ஜனவரி 17, 2010
Arrest
முன்பு பிள்ளையான் குழுவில் செயலாளர் பதவி வகித்தவரும் பின் நாளில் கருணாவுடன் சேர்ந்து சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட்டவருமான நிஷாந்தன் என்பவரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர் ஏ.கே ரக துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தது மட்டுமன்றி அண்மையில் இளம்பெண் ஒருவரை கடத்திய குற்ற சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.