மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை மாவட்ட வாக்களிப்பு நிலைமை

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26, 2010
sampanthan polll
மட்டக்களப்பு மாவட்டம் எழுவான் கரை பகுதியில் வாக்களிப்பு சுறு சுறுப்பாக இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் படுவான்கரை பிரதேசங்களில் முற்பகல் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஆனால் தற்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதாகவும் கூறப்படுகின்றது.
திருகோணமலை பகுதியில் இரா சம்பந்தன் தனது வாக்கினை இன்று முற்பகல் வாக்களிப்பு நிலையம் சென்று செலுத்தினார். திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலை அண்மித்தவேளையே மக்கள் வாக்களிக்க தொடங்கியதாக கூறப்படுகின்றது. அம்பாரை மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி சுமுகமாக வாக்களிப்பு இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.