மட்டகுழிய இராணுவ முகாம் அருகில் மூன்றாவது சடலம் இன்று மீட்பு

வியாழக்கிழமை, மார்ச் 11, 2010
வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதவான் வருகைக்காக பொலிஸார் அவ்விடத்தில் காத்திருப்பதாகவும் அதன் பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமுக்கு அருகில் இருந்து நேற்றுமுன்தினம் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.