பொன்சேகா விடயத்தில்சட்ட ரீதியான அணுகுமுறைகளை இலங்கை பின்பற்றும் - இந்தியா

வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010
India
பொன்சேகாவின் கைது தொடர்பிலும் அவரது குற்ற சாட்டு தொடர்பாகவும் இலங்கை சட்ட ரீதியான முறைமைகளை பின்பற்றும் என இந்தியா கூறியுள்ளது.
இலங்கை எமது நட்பு நாடு என்ற வகையிலும், அயல் நாடு  என்ற வலையிலும் தன்னுடைய ஜன நாயக விழுமியங்களை மதித்து செயற்படும் அதே வேளை உரிய விசாரணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளது இந்தியா.
இந்தியாவின் இந்த கூற்று மஹிந்தவுக்கு ஆதரவாகவே இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். அதாவது மேற்குலகமும் ஐகிய நாடுகளினதும் கூற்றைவிட இது மழுப்பலாக மஹிந்தவுக்கு ஆதரவாக இருப்பதாகவே இருக்கின்றது.