புலிகளின் தலைவரை கூட்டணியினர் பிழையாக வழி நடத்தினார்களாம் - பிள்ளையான்

சனிக்கிழமை , ஜனவரி 2, 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தவறாக வழி நடத்தி அழிவுப் பாதைக்குக் கூட்டிச் சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்று பிள்ளையான் கூறியுள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிக்குடிக்கான டிப்போ நிர்வாகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிள்ளையான் தனது கண்டு பிடிப்பினை கூறியுள்ளார்.