தொடர்ந்து இலங்கை அகதிகள் செல்வதனால் அவுஸ்ரேலியா அதிருப்தி
திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
யுத்தத்தின் காரணமாகவே, அதிகமான இலங்கையர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு பிரவேசிப்பதாக ஆஸ்திரேலியாவின் பிரதி பிரதமர் ஜூலிய ஜில்லாட் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் 66 நாள்களில் சட்டவிரோதமாக அரசியல் புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு வந்த 20 இலங்கையர்களும், நேற்றுக் காலை படகு மூலம் வந்த 28 இலங்கையர்கள் உட்பட இரண்டு கப்பல்ப் பணியாளர்களும் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புச் சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜூலிய ஜில்லாட் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் மீள்கட்டுமானம், இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தல் ஆகியவற்றையே விரும்புவதாகவும் ஜூலிய ஜில்லாட் சுட்டிக்காட்டினார்.
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி















