தேர்தல் முடிய சம்பந்தன் குழுவிற்கு இந்தியா அழைப்பு விடுக்குமாம்.

திங்கட்கிழமை, மார்ச் 8, 2010
தற்போது தேர்தல் காலம் என்பதனால் அரசாங்கத்துடன் தமிழர் பிரச்சினைகள் பற்றி பேச முடியாது என்று நிருபாமா ராவ் சம்பந்தன் குழுவினருக்கு கூறியுள்ளார்.கொழும்பில் இந்திய இல்லத்தில் நடந்த சம்பந்தன் குழுவினருடனான சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிய அரசாங்கத்துடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பேச உள்ளோம். ஆகவே உங்களுக்கும் அழைப்பு விடுகின்றோம் என கூறியதாக சம்பந்தன் குழுவில் ஒருவரான மாவை தெரிவித்துள்ளார்.

புலிகளையும் போரினையும் காரணம் காட்டிய இந்தியா இப்போ தேர்தலினை காரணங்காட்டுகின்றது. மட்டுமல்ல தேர்தல் முடிய அரசாங்கத்திற்கு  மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை ஆகவே தமிழர்கள் உங்கள் ஆதரவினை மஹிந்தவிற்கு வழங்கவேண்டும் என கூறினாலும் வியப்பதற்கு எதுவும் இல்லை.

தமிழர் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு வரும் வரை தமிழர் நிலம் மீதான குடியேற்றங்களையும் இராணுவ விஸ்தரிப்புக்களையும் நிறுத்த வேண்டும் என ஒரு பேருக்காவது சொல்வதற்கு இந்தியாவுக்கு துணிவு இல்லை அல்லது மனம் இல்லை.

தமிழர்கள் ரியூப் லைட்டுக்களாக இருந்தால் இந்தியா இப்படித்தான் செய்யும்.