தமிழக பொலிசாரின் பாலியல் துன்புறுத்தல் - தமிழீழ பெண் தீகுழிப்பு!

புதன்கிழமை, மார்ச் 10, 2010
தமிழகத்தில் உள்ள ஈழவர் அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கரூர் அருகே ராயனூர் என்னுமிடத்தில் பொலீஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்பெண் தீக்குளித்துள்ளார் என்றும் தற்போது கரூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக தகவல்கள் கூறுகின்றன.

கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இவரது கணவர் சிறையிலிருக்கின்றார்.விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இப்பெண் பொலீஸாரினால் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலைத்தொடர்ந்து இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.