தனித்தா, மஹிந்தவுடன் சேர்ந்தா, பொது தேர்தலில் போட்டியிடுவது? சனி அன்று பிள்ளையான் முடிவாம்

செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 2, 2010
Pillaiyaan
பொது தேர்தலில் தனித்து போடியிடுவதா அல்லது ஆழும் தரப்புடன் சேர்ந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் சனி அன்று தாம் முடிவு எடுக்கப்போவதாக பிள்ளையான் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமது கருத்துக்களை மக்கள் கேட்காது மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதே இந்த  முடிவுக்கு காரணம் என கூறப்படுகின்றது. பெரும்பாலான பிள்ளையானின் சகாக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த முறை பற்றி ஆடிப்போயுள்ளனர். ஆகவே மீண்டும் மஹிந்தவுடன் சேர்வது தமது அரசியல் எதிர்காலத்தினை பாதிக்கும் என்பதால் தனித்து போட்டியிடவேண்டும் என்பதே பலரது கருத்தாக இருக்கின்றதாம்.

டக்ளஸ் அவர்களும் தனித்து போட்டியிடமுடிவு செய்திருப்பது தெரிந்ததே.