சீன உதவியின் நுரைசோலை அனல் மின் நிலையம் தீவைப்பு

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
nuraisolai
சீன உதவியினால் நடைமுறைப்படுத்தப்படும் நுரை சோலை அனல் மின் நிலையம் தீ வைப்பிற்கு உள்ளாகியது. இனம் தெரியாத நபர்களினால் இந்த அனல் மின் நிலையம் தீவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. தீயினை அணைக்க முப்படைகளின் உதவி கோரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எரிபொருள் களஞ்சியம் உட்பட பல சுற்றுபுற கட்டடங்கள் சேதமுற்றதாக பொலிஸ் கூறியுள்ளது.

நுரைசோலை அனல் மின் திட்டம் சுற்று புற சூழலிற்கு மாசு விளைவிப்பதுடன் பூகோள ரீதியாக இந்தியாவிற்கும் அச்சுறுத்தலான ஓர் திட்டமாக சீனாவினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.