சிறிலங்காவில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளை விஞ்சிய சீனாவின் உதவி

வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
China
சிறிலங்காவில் உலகவங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவற்றின் கடன் உதவிகளை விட சீனாவின் கடனுதவி அதிகரித்துள்ளது.சீனா 1.2 பில்லியன் டொலர்களை 2009 இற்கு கடனாக வழங்கியுள்ளது. இது உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய கடன் தொகைகளை விட அடத்கமானது. மொத்தமாக சிறிலங்கா பெற்ற வெளி நாட்டு தொகைகளில் 60 வீதத்தினை சீனா வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் சீனா மேற்குலகத்தினை விஞ்சியுள்ளது என கூறப்படுகின்றது.