சரத்பொன்சேகா அணி, ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலின் பின்னர் கூட்டு!

ஞாயிற்றுகிழமை, மார்ச் 7, 2010
சரத் பொன்சேகா தலைமையிலான டி.என்.ஏ கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியினை தலைமையாக கொண்ட  யூ.என்.எவ் கட்சியும் தேர்தலின் பின்னர் கூட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.
பொது தேர்தலின் பின்னர் இரு அணியினரும் கூட்டாக அரசாங்கத்தினை அமைப்பதற்கும் உடன்பாடு செய்யவுள்ளதாக லக்பிம தெரிவித்துள்ளது.
இதன் போது சிறு கட்சிகள் மற்றும் தமிழர் கூட்டமைபுக்களையும் அழைத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.