கப்பலில் கனடா சென்ற 76 பேரில் இறுதியாக உள்ள 25 பேரையும் விடுவிக்க ஏற்பாடு

வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010
ocean lady
கனடாவுக்கு சென்ற ஓசியான் லேடி கப்பலில் 76 பேரில் பலர் கட்டம் கட்டமாக விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் தெரிந்ததே. இறுதியாக 25 பேர் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் என தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை விசாரணைகள் முடிந்தன எனவும் விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கனேடிய அரசு தரப்பு தெரிவித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே வேளை இவர்கள் மீதான தொடர் கண்கானிப்பு இருக்கும் எனவும் கனேடிய குடிவரவு அதிகாரிகளும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் கூறியுள்ளனர். இதற்கமையவே கூடுதலானோர் கனேடிய தமிழர்களின்  ஆள் பிணை மற்றும் ரொக்க பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.