கடல்மார்க்க ஆட்கடத்தல்களை தடுக்கு புதிய இரகசிய பொலிஸ் பிரிவு

புதன்கிழமை, மார்ச் 10, 2010
இலங்கையில் இருந்து கடல்வழியாக மேற்கு நாடுகளிற்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதனை தடுக்க விசேட பொலிஸ் அணியினை சிங்கள பொலிசார் அமைத்துள்ளனர்.
இந்த இரகசிய பொலிஸ் அணி கடல் மார்க்க ஆட்கடத்தலை தடுக்கும் பொலிஸ் பிரிவு எனும் பெயரில் இயங்கும். இவர்கள் இந்தியா, அவுஸ்ரேலியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய பொலிஸ் பிரிவுகளுடன் சேர்ந்து இயங்கும் எனவும் கூறப்படுகின்றது. இந்தியா , மலேசியா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் இருந்தே ஆட்கடத்தல்கள் நடைபெறுவதாக பொலிசார் கூறியுள்ளனர்.