ஓசியானிக் விக்கிங் கப்பலில் சென்றவர்களுள் பெண்போராளி

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2010
ஆஸ்திரேலியாவிலுள்ள  கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளில்   விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறையில் பணியாற்றிய பெண்மணி ஒருவர் இருப்பதாக ஆஸ்திரேலிய இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளுடன் கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருக்கும் இந்தப் பெண்மணி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குரியவர் எனவும் அந்த இணையதளம் குறிப்பிட்டது.

குறித்த பெண் கடந்த ஒக்டோபர் மாதம்  ஒசானிக் விக்கிங் கப்பலிருந்து காப்பாற்றப்பட்டிருந்தார்.