ஏற்றுமதி வரி சலுகையினை ஐ.ஒன்றியம் இரத்து செய்தது.

செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 16, 2010
இலங்கைக்கான ஏற்றுமதி வரி சலுகையினை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தியுள்ளது. ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்த விடயம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்களை  கவனத்தில் எடுக்க தவறியதால் இலங்கை தண்டிக்கப்படக்கூடும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை  ஆகவே முடிந்த முடிவாக தாம் வரிசலுகையினை நிறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.