வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 2009
கனேடிய கொன்சர்வேட்டிவ் கட்சியினை சேர்ந்த இரு பாராளுமன்ற உற்ப்பினர்களுக்கு இலங்கைக்கு சென்று அங்கிருக்கின்ற தமிழ் மக்களின் தடுப்பு முகாம்களை பார்வையிடுவதற்கு விசாவிற்கு விண்ணப்பித்தபோது அதனை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.பற்றிக் பிரவுண்,போல் கலெண்ட்ரா ஆகிய இரு உறுப்பினர்களுக்கே விசா மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இது தொடர்பாக கனேடிய அரசுக்கு முறையிடவுள்ளதாக தெரியவருகின்றது.