அவசர கால சட்டம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

புதன்கிழமை, மார்ச் 10, 2010
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது.
நேற்று  காலை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்படுவது தொடர்பான வாக்கெடுப்பில், ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன அவசரகாலச் சட்டம் நீடிப்பதற்கு எதிராக வாக்களித்துள்ளன.