அவசரகால சட்டம் தேவை இல்லை - பவ்ரல் அமைப்பு
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
இதுகுறித்து பி.பிசி. தமிழோசையிடம்கருத்து தெரிவித்துள்ள பெஃப்ரல் அமைப்பின் நிரிவாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி,"இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் நடக்கப் போகிறது எனவே இப்போது இது போன்ற அவசர கால நிலையை நீடிக்க தேவையில்லை" எனத் தெரிவித்தார்.
அதே நேரம் அவசர கால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும், ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அவசர நிலை சட்டம் துஷ்பிரோயகம் செய்யப்பட்டதாக தமக்கு இதுவரை நேரடிப்புகார்கள் வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்
- பயனர் எம்முடன் கருத்துப் பரிமாறும் வசதி













