அரசியல் தீர்வை இந்தியா மீண்டும் வலியுறுத்துகின்றதாம்

வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
India
தமிழர் பிரச்சினைக்கு எல்லா சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வு தேவை என இந்தியா கூறியுள்ளது. இந்திய அரசு இலங்கை தமிழர் பிரச்னைக்கு, எல்லா சமூகங்களாலும் ஏற்ற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு அரசியல் தீர்வு "அத்தியாவசிய தேவை" என்று  இந்திய வெளியுறவு அமைச்சர் ச. ம. கிருஷ்ணா கூறியதாக PTI செய்தி ஸ்தாபனம் கூறுகின்றது.
"இலங்கையில் இராணுவ நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்திருப்பது ஒரு நீண்ட கால அரசியல் தீர்வுக்கு  ஒரு நல்ல சந்தர்பம் என்றும், 
"இந்தியாவின் இந்த நிலைபாட்டை இலங்கை அரசுக்கு தாம் தெரிவித்திருப்பதாகவும் அவர் அங்கு கூறினார்.

ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதே ஒரே தீர்வு என சிங்களம் கக்ங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றது. அதனை தடுப்பது அல்லது அதுபற்றி இந்திய அரசு எதுவும் கூறப்படவில்லை.