மட்டக்களப்பு நிருபர்

Stories from மட்டக்களப்பு நிருபர்

வியாழக்கிழமை, மார்ச் 4, 2010
மட்டக்களப்பில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட  22 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2010
பிள்ளையானின் இராணுவ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெறப்பட்டதற்கான பின்னணிக் காரணங்கள் எதுவும் தெரியவில்லை என பிள்ளையான்  வட்டாரம்  தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 7, 2010
பொது தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளை பெறவேண்டுமாயின் தனித்து போட்டியிடவேண்டும் அப்போதுதான் வெல்ல முடியும் வென்ற பின்னர் வருகின்ற அரசுடன் கூட்டு சேரலாம் என்பதே பிள்ளையான் கட்சியின் கூடுதலான அங்கத்தவர் விருப்பமாம்.
சனிக்கிழமை , பெப்ரவரி 6, 2010
தமிழ்ச் சமூகம் என்பது தனித்துவம்மிக்கதொரு இனமாகும். வடக்கு, கிழக்கு என்பது தமிழரின் பூர்வீகத் தாயகம் என்ற உண்மையை உணர்த்தியுள்ள தமிழ் மக்கள் தமக்கு ஏற்றதான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் முடிவுகளில் வலியுறுத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 2, 2010
பொது தேர்தலில் தனித்து போடியிடுவதா அல்லது ஆழும் தரப்புடன் சேர்ந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் சனி அன்று தாம் முடிவு எடுக்கப்போவதாக பிள்ளையான் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 26, 2010
மட்டக்களப்பு மாவட்டம் எழுவான் கரை பகுதியில் வாக்களிப்பு சுறு சுறுப்பாக இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் படுவான்கரை பிரதேசங்களில் முற்பகல் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஆனால் தற்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதாகவும் கூறப்படுகின்றது.
திங்கட்கிழமை, ஜனவரி 25, 2010
ஏறாவூர் பிரதேசத்தில் 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இறந்த உடல் இன்று ஒதுக்கு புறம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 15, 2010
முஸ்லிம்களின் பூரண ஆதரவு கிடைக்காதிருந்த போதும் 20க்கும் அதிகமான முஸ்லீம்களை அமைச்சர்களாக்கி முஸ்லிம் சமூகத் திற்கு சேவையாற்றியுள்ளோம்.
வியாழக்கிழமை, ஜனவரி 7, 2010
மட்டக்களப்பு மா நகர சபை மேயரும் அண்மையில் பிள்ளையான் குழுவில் இருந்து கருணாவின் வேண்டுதலிற்கு அமைய சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தவருமான    சிவகீதா பிரபாகரன் அவர்கள் சரத்பொன்சேகாவுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 5, 2010
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன் ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டென் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை 2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன். இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன்.
சனிக்கிழமை , ஜனவரி 2, 2010
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தவறாக வழி நடத்தி அழிவுப் பாதைக்குக் கூட்டிச் சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்று பிள்ளையான் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை, டிசம்பர் 31, 2009
கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் கிழக்கு மாகாண மீனவர்கள் கடல்தொழிலிற்கு  செல்வதில் நேர வரையறை இருந்தது.
வியாழக்கிழமை, டிசம்பர் 31, 2009
கல்முனை மாநகர சபை மேயர் எச்.எம்.எம்.ஹரீஸை வழிமறித்துத் தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கத் நஸீம் மற்றும் அவரது சகாக்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று நேற்றுக் காலை கல்முனையில் இடம்பெற்றது.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
தென் தமிழீழம் அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் பிள்ளையான் குழுவினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பிள்ளையான் தரப்பினை சேர்ந்த  மூவர் படுகாயமுற்றனர்.
புதன்கிழமை, டிசம்பர் 16, 2009
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை சுமார் 50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நிவாரணங்களை அந்தந்தப் பிரதேச செயலக அதிகாரிகள் வழங்கிவருவதாக அம்பாரை மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ எஸ் எம் ஸியாத் தெரிவித்தார்.
வியாழக்கிழமை, டிசம்பர் 3, 2009
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது. திருகோணமலை மாவட்டம் திருகோணமலைத் தொகுதி - 86 ஆயிரத்து 685 பேர் ,சேருவில தொகுதி -69 ஆயிரத்து 47 பேர் ,மூதூர் தொகுதி - 85 ஆயிரத்து 401 என 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
திங்கட்கிழமை, அக்டோபர் 19, 2009

பிள்ளையானை கட்டாயம் நீக்கியே ஆகவேண்டும் என  கருணா மீண்டும் கூறியுள்ளார். பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக் இல்லை. அவர் யாரோ ஒருவரின் கருத்துக்கு பின்னால் செயற்படுகின்றார். கிழக்கை கட்டி எழுப்ப நல்ல சந்தர்ப்பம் கிடத்து கொண்டிருக்கின்றது ஆனால் அவர் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை செய்வதெல்லாம் முட்டாள் தனமான வேலை எனவும் கருணா கூறியுள்ளார்.

புதன்கிழமை, அக்டோபர் 14, 2009
" கடந்த காலத்தை மறந்து அபிவிருத்தியில் சகல தரப்பினரும் இனண்ந்து செயல்பட வேண்டும் .அபிவிருத்தியைப் பொறுத்த வரை எமது ஒத்துழைப்பு சகலருக்கும் கிடைக்கும் " என நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமர் நேற்று வவுணதீவு பிரதேசத்தில் சர்வதேச வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். யாருக்கு இந்த அழைப்பு விடப்பட்டது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை .
வியாழக்கிழமை, செப்டம்பர் 24, 2009

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள களுவாஞ்சிக்குடி பிரிவு கிராம சேவை அலுவலகரான கார்த்திகேசு யோகேந்திரன் என்பவர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாகரை மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தார். அவர் அணிந்திருந்த சப்பாத்தினுள் மணல் இருந்ததனால் சந்தேகப்பட்டு அவரை கைது செய்தனர்.

செவ்வாய்க்கிழமை, யூலை 28, 2009

தமிழரின் பூர்வீக நிலமான மணலாற்றில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசு திட்டம் தீட்டி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பான திட்டத்தினை நேற்று முன்தினம் மணலாற்றுக்கு சென்ற மகிந்த அரசின் மூத்த ஆலோசகரும்,சகோதரருமான பசில் ராஜபக்ச  அவர்கள் வகுத்துள்ளார்.