செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சித்திரவதைக்கு உட் படுத்தப்படக்கூடிய அபாயம் நிலவுகிறது என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர் போராளிகள் உள்ளிட்ட பெருந்தொகையான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறைந்த பட்சம் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.