ஞாயிற்றுகிழமை, யூலை 26, 2009
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கானதும் தற்பாதுகாப்புக்குமானதுமான ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அனைத்துலகத்தின் உதவியினை பெற்று சிங்கள அரசு அழித்துவிட்டதாக கூறும் நிலையில், அங்கிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட தமிழரின் தற்பாதுகாப்பு போருக்கு ஆதரவாக இருந்த 400,000 மக்களையும் நீண்டகால அடிப்படையில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது.அதற்கான ஏற்பாடுகளாகவே அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கைகள் காணப்படுகின்றன.